search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் செயல் அலுவலர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7, குரூப்-8 தேர்வு- நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
    X

    கோவில் செயல் அலுவலர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7, குரூப்-8 தேர்வு- நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

    • கிரேடு 3-க்கான எழுத்து தேர்வு நாளை, நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் சார்பில் இந்துசமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் செயல் அலுவலர், கிரேடு 3-க்கான எழுத்து தேர்வு நாளை, நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) கிரேடு 3-க்கான குரூப்-7 தேர்வும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) செயல் அலுவலர்களுக்கான குரூப்-8 தேர்வும் நடைபெறுகிறது.

    இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுது.

    இதில் தேர்வு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து குறித்தும் தேர்வு மையங்களை தயார் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    Next Story
    ×