search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.1 கோடிக்கு சூரியகாந்தி விதை ஏலம்
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் ரூ.1 கோடிக்கு சூரியகாந்தி விதை ஏலம்

    • 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வியாழக்கிழமை 236 விவசாயிகள் கலந்து கொண்டு 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1 கோடியே 5லட்சத்து 77ஆயிரத்து 673-க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×