என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம்
- சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த எபிசியண்ட்மணி தலைமை தாங்கினார்.
- 150 நாட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம் :
திருப்பூர் ஒன்றியம் ,மங்கலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 ஆண்டிற்கான சமூக தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டமானது மங்கலம்- சமுதாயநலக்கூடத்தில் நடைபெற்றது.சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த எபிசியண்ட்மணி தலைமை தாங்கினார்.
மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார் .இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்நவமணி ,சமூக தணிக்கை அலுவலர் கதிரவன், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 100 நாட்கள் வழங்கப்படும் வேலை நாட்களை கூடுதலாக 150 நாட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்