என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை
- 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம்.
பல்லடம் :
பல்லடம்,அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால்,ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- சமீபகாலமாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கட்டடம், குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்