search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து  அதிகாரிகள்-அரசியல் கட்சியினருடன் சிறப்பு பார்வையாளர் ஆலோசனை
    X

     திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. அருகில் கலெக்டர் வினீத் மற்றும் பலர் உள்ளனர். 

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து அதிகாரிகள்-அரசியல் கட்சியினருடன் சிறப்பு பார்வையாளர் ஆலோசனை

    • திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • புனித அமல் அன்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் பேசுகையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அறிவுரைகளின் படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 தொடர்பாக நடைபெற்று முடிந்த சிறப்பு முகாம் நாட்களில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்ய கீழ்கண்டவாறு வரப்பெற்ற படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின் படி விசாரணை மேற்கொண்டு உரிய காலக்கெடுவிற்குள் முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தினை முழுமையாக ஆய்வு செய்யவும் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

    முன்னதாக காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் புனித அமல் அன்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் , உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தேர்தல் தாசில்தார்தங்கவேல், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×