search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

    • ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
    • வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் .

    பல்லடம் :

    பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு 1.12. 2019 முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையையும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு மின்வாரிய அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்லடம் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    Next Story
    ×