என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் பஸ் நிலையத்தில் வணிக வளாக கடைகள் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதி
- 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
- தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் வாங்க முடியவில்லை.
பல்லடம் :
பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த 9 நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.கடந்த 10 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டப்பட்டதால் பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை, வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது .எனவே, பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பஸ்நிலைய கடை உரிமையாளர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சரிவர வருவதில்லை. இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம், தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, உரிமம் புதுப்பிக்க கடை வாடகை உடன் 15 சதவீதம் வாடகையை உயர்த்தி கட்ட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏற்கனவே உள்ள வாடகை கட்ட முடியாமல் விழி பிதுங்கிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில் வாடகை உயர்த்தி கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் .எனவே நகராட்சி நிர்வாகம், எங்களது வாழ்வாதாரத்தை மனதில் வைத்து கடைகளின் வாடகையை குறைக்கவும், இரவு 7மணிக்கு மேல் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்