search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர்  ரெயில் நிலையத்திற்கு  தியாகி திருப்பூர் குமரன் பெயரை   நிரந்தரமாக வைக்க வேண்டும் - ஆம் ஆத்மி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை நிரந்தரமாக வைக்க வேண்டும் - ஆம் ஆத்மி வலியுறுத்தல்

    • மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.
    • தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை நிரந்தரமாக வைக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.அதில், 75 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டிதரும் 'டாலர் சிட்டி'யான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்காக திருப்பூர் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திருப்பூர் மக்களின் விருப்பமும், நீண்ட நாள் கோரிக்கையுமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நிரந்தரமாக, இப்பெயரை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×