search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயம்  அருகே வேன் மோதி  ஒருவர் பலி
    X

    கோப்புபடம். 

    காங்கேயம் அருகே வேன் மோதி ஒருவர் பலி

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவ இடத்திலேயே குமார் பலியானார்.

    காங்கேயம்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் குமார்( வயது 35). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான வெள்ளியங்கிரி(40), மணி (36) ஆகியோருடன் சொந்த ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னிமலை வழியாக காங்கேயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சாவடி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×