என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் தாய் -மகள் மாயம்
- 3 தினங்களுக்கு முன்பு காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், காந்திமதியின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில், முத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 43). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் காந்திமதி (வயது 21) . இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜூலை 6ந்தேதி காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காந்திமதி தனது தாய் ஈஸ்வரியிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்,காந்திமதியின் தாய் ஈஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்