search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுங்கியம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    கொடுங்கியம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • கோவில் கும்பாபிேஷக விழா இன்று மாலை மங்கள இசையுடன் துவங்குகிறது.
    • காலை 7:45 மணிக்கு ஆலய கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே கொடுங்கியத்தில், ஸ்ரீ மகா லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா இன்று மாலை 6மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது.

    தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, கோபுர கலச கண் திறத்தல், அம்மனுக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் முதற்கால யாக வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.வரும் 8-ந் தேதி, அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7:45 மணிக்கு மேல் ஆலய கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. காலை 8:30 மணிக்கு மேல், கோபுர கலசத்துக்கு தீர்த்தம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×