என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி
- கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
- 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடந்த கலைஞர் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் பி.ஏ.சேகர், ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ருக்மணி சேகர், சவுந்தர்ராஜன், மற்றும் சம்பத், விஜயலட்சுமி, மலர்க்கொடி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல பல்லடம் பஸ் நிலையம் முன்பு நகர தி.மு.க. சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு, நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜசேகரன்,சுகன்யா ஜெகதீஸ்,வசந்தாமணி தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் குட்டி பழனிச்சாமி,கவுஸ்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடத்தில், ஒன்றிய தி.மு.க.சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,பல்லடம்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜ், வைஸ் முத்துக்குமார், என். எஸ். கே. நகர் கிட்டுசாமி, இளைஞரணி கௌதம், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,மற்றும் விமல் பழனிச்சாமி, எஸ்.எம்.பழனிச்சாமி,சாமிநாதன், பாலகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்