search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை வாரச்சந்தையில் விவசாயிகள் - தொழிலாளர்கள் மோதல்
    X

    கோப்புபடம்.

    உடுமலை வாரச்சந்தையில் விவசாயிகள் - தொழிலாளர்கள் மோதல்

    • தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது.
    • டெம்போ வேன்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து கடைக்காரர்களிடம் விற்பனை செய்கின்றனர். தற்பொழுது தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது. ஆனால் உடனடியாக லோடுகளை இறக்க முடியாததாலும் கடைகள் முன்பு நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    இது தொடர்பாக விவசாயிகள் ,கலாசு தொழிலாளர்கள் , வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் தக்காளி வண்டிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாசு தொழிலாளிகள் இது குறித்து கூறுகையில், வாரச்சந்தை வளாகம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை முன்பு வண்டியை நிறுத்தக்கூடாது என்கின்றனர். எனவே காய்கறிகளை ஏற்றி இறக்க முடியவில்லை என்றனர். விவசாயிகள் கூறுகையில் லோடு வந்தால் இறக்க ஆட்கள் வருவதில்லை. முதல் நாள் வந்தால் மறுநாள் வருவதில்லை.

    அதனால் தான் இன்று வண்டியை நிறுத்தி உள்ளோம். இனி நாங்களே இறக்கி கொள்கிறோம். கூலியை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

    Next Story
    ×