என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
- விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
- நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த மூலனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (வயது 53). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 22 ந் தேதி சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் அப்பாஸ் (29). பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி மகளிா் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் அப்பாசை 2020 ஆகஸ்ட் 16ந் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கின் மீதான விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அப்பாசுக்கு 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்