search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடபட்ட காட்சி.

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம்

    • தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • தர்ணா போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பல்லடம் :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    தர்ணா போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர காங்கிரஸ் செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தபால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதில் ருத்ரமூர்த்தி, ராமச்சந்திரன்,அர்ஜுனன் அமராவதியப்பன், சாகுல் அமீது மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×