search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை தண்ணீர் 161 கி.மீ., கடந்து காங்கயம் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    பவானிசாகர் அணை தண்ணீர் 161 கி.மீ., கடந்து காங்கயம் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி

    • ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
    • 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்

    காங்கயம் :

    பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 161 கி.மீ., கடந்து காங்கயம் பகுதியை அடைந்துள்ளது. இதனால் கீழ் பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி .கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அணை நிரம்பியதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த, 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 120 நாட்கள் இந்த தண்ணீர், 2,300 கன அடி வீதம் திறக்கப்படும்.தண்ணீர் திறக்கப்பட்ட நான்கு நாளில் நேற்று மாலை காங்கயம், நத்தக்காடையூர், பொடாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் கடந்து சென்றது. வழக்கமாக 6 நாட்களுக்குப் பின்பே அணையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது நான்கு நாளில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×