என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணை தண்ணீர் 161 கி.மீ., கடந்து காங்கயம் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி
- ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
- 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்
காங்கயம் :
பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 161 கி.மீ., கடந்து காங்கயம் பகுதியை அடைந்துள்ளது. இதனால் கீழ் பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி .கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அணை நிரம்பியதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த, 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 120 நாட்கள் இந்த தண்ணீர், 2,300 கன அடி வீதம் திறக்கப்படும்.தண்ணீர் திறக்கப்பட்ட நான்கு நாளில் நேற்று மாலை காங்கயம், நத்தக்காடையூர், பொடாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் கடந்து சென்றது. வழக்கமாக 6 நாட்களுக்குப் பின்பே அணையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது நான்கு நாளில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்