search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை
    X

    செல்வகுமார்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை

    • வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் செல்வகுமார்(வயது25). இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற அவரது பெற்றோர் திரும்ப வீடு வந்து பார்த்தபோது செல்வகுமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×