search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
    X

    கோப்புபடம்

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

    • ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் உடல் சிதைந்து இறந்து கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்த என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த சட்டையில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் வந்ததற்கான பேருந்து பயண சீட்டு இருந்தது. எனவே அவர் தாராபுரத்திலிருந்து திருப்பூருக்கு வந்து ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×