search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே குடிநீர் கிடைக்காமல் 50 கிராமமக்கள் தவிப்பு - போராட்டம் நடத்த முடிவு
    X

    கோப்புபடம்.

    தாராபுரம் அருகே குடிநீர் கிடைக்காமல் 50 கிராமமக்கள் தவிப்பு - போராட்டம் நடத்த முடிவு

    • அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர், நஞ்சியம்பாளையம், தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ், நவனாரி, பெரிய குமாரபாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்களுக்கு சுண்ணாம்பு காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மின்மோட்டார்களை சரி செய்து உடனடியாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என காவிரி கூட்டு குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×