என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2,213 பேர் விண்ணப்பம்
- காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
- ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் :
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்