search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் ரூ.50 ஆயிரம் திருட்டு
    X

    பஸ்சில் ரூ.50 ஆயிரம் திருட்டு

    • பிளேடால் அறுத்து துணிகரம்
    • விவசாயி பணத்தை இழந்தார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா குரும்பேரி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் (வயது 68) விவசாயி இவர் நேற்று குரும்பேரியில் இருந்து திருப்பத்தூருக்கு சென்றார்.

    அங்கு தனியார் நகைக்கடையில் அடமானம் வைத்த நகை மீட்பதற்காக ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து உள்ளார். கடைக்காரர் இல்லாததால் மீண்டும் நாளை வருமாறு கூறியதால் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதூர் நாடு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

    அப்போது கூட்டத்தில் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பிளேடு போட்டு அறுத்து ரூ 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து கிருஷ்ணன் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்ததின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×