என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம், 10 பவுன் நகை கொள்ளை
- பூட்டை உடைத்து துணிகரம்
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் ஊராட்சி சகல தெருவில் வசிப்பவர் சந்திரன் (வயது 67) இவர் போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி கலா (வயது 60) இவர்கள் இருவரும் கடந்த 27 -ந் தேதி சனிக்கிழமை இரவு கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் நடைபெறும் தங்களுடைய உறவினர் உணவு விடுதி திறப்பு விழாவிற்கு பெங்களூர் சென்று விட்டனர்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணம் மற்றும் 10 பவுன் தங்க நகை அரை கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்று விட்டனைர்.
இந்நிலையில் சந்திரன் உறவினர் நிகழ்ச்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய சந்திரனுக்கு நகைகள் திருடு போனது தெரியவந்தது.
கேமராக்கள் ஆய்வு
இதனையடுத்து சந்திரன் ஜோலார்பேட்டை போலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்