search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோப்புப்படம்

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • ப.முத்தம்பட்டி கிராமத்தில்நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா ப.முத்தம்பட்டி கிராமம் ஆண்டி வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது .

    முன்னதாக விக்னேஸ் வர பூஜை , புண்யாஹவாசனம் , கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் , மகாலட்சுமிஹோமம் , மகா தீபாராதனை நடைபெற் றது . பின்னர் வாஸ்து பூஜை , மகா தீபாராதனை நடைபெற்றது .

    தொடர்ந்து புனித கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு முத்து மாரியம்மன் , வைஷ்ணவி , மகேஸ்வரி , ஸ்ரீ விஷ்ணு , துர்கை ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது பெண் பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடினர் . முத் துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குகாட்சி அளித் தார் . நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. , ஊர் கவுண்டர் எம் . ஆனந்தகுமார் , ஊர் தர்மகர்த்தா தாமோதரன் , சிவானந்தம் , ஆசிரியர் சுப்பிரமணி , சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை தனபால் என்கிறரமேஷ் , டி.சுரேஷ் , மற்றும் ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள் செய்திருந்தனர் .

    Next Story
    ×