search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி
    X

    நாட்டறம்பள்ளி அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது பொது மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

    • பொதுமக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாயனத்தியூர் ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கிறது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விவசாயம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனர்.

    ஆனால் கடந்த 20 வருடங்களாக இந்த ஏரி நிரம்பாததால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக தண்ணீர் இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் போதுமானதாக வளர்ச்சி பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டும் தற்போது சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் ஏரி பாதி அளவிற்கு நிரம்பியது கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த ஏரியானது நேற்று முழு கொள்ளளவை எட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கோடி போனது.

    இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று கூடி கோடி போன பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியின் அம்மணாங்கோயில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரஜினிகாந்த் தலைமையில் புதுப்பேட்டை கூட்டுறவு சங்க இயக்குனர் ஆனந்தன் மற்றும் ஆறுமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×