search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலூர் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழா
    X

    நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானிகள்.

    காவலூர் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழா

    • விஞ்ஞானிகள் ஏராளமானோர் பங்கேற்பு
    • ஆராய்ச்சிக்கு தேவையான ஏராளமான கோப்புகள் இங்கு உள்ளதாக தகவல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே ஜவ்வாது மலையில் உள்ள காவலூரில் இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.

    கடந்த 1972-ம் ஆண்டு இந் திய வான்வெளி ஆராய்ச்சி யாளர் வைனு பாப்பு என் மாகும். னும் வான்வெளி ஆராய்ச்சி யாளரின் முயற்சியால் இந்திய அரசு சார்பில் வாணியம் பாடி அருகே காவலூர் வனப்பகுதியில் இந்திய அரசு சார்பில் வான்வெளிதொலை நோக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.

    இங்கு ஒரு மீட்டர் விட்ட முடைய (40 இஞ்ச்) தொலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டு 50- ம் ஆண்டு நிறைவு விழா ஆராய்ச்சிமைய வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் வான் வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ் ஞானிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வான் வெளி ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இந்த வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல் வேறு தொலைநோக்கிகள் உள்ளன. அதில் ஒரு மீட்டர் விட்டமுடைய (40 இஞ்ச்) தொலை நோக்கியின் 50-ம் ஆண்டு நிறைவு விழா கொண் டாடப்பட்டு வரு கிறது. கொடைக்கானலில் ஒரு ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு சூரியனை பற்றி சுமார் 120 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. காவலூரில் 1964-ம் ஆண்டு முதல் வான்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    1972-ம் ஆண்டு தொலை நோக்கி ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து ஒரு மீட்டர் விட்டமுடைய (40 இஞ்ச்) தொலைநோக்கி முழுக்க முழுக்க இந்திய விஞ் ஞானிகளால் தயாரிக்கப் பட்ட ஒரு தொலைநோக்கி ஆகும்.

    காவலூரில் உள்ள வைனு பாப்புவான்வெளி ஆராய்ச்சி மையம் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வான்வெளி ஆராய்ச்சி மையமாகும். இந்த ஆராய்ச்சிமையத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், பிலாநெட்ஸ், கேலக்ஸீஸ், கிளஸ்டர்ஸ், நெபுலா உள் ளிட்டகண்களில் பார்க்கக்கூடிய, ஒளி உமிழக்கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சனி கிரகத் தில் உள்ள வளையம் போல் யுரேனசுக்கும் வளையங்கள் உள்ளது என்று இந்த ஆராய்ச்சி மையத்தில் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளோம். நட்சத்திரங்கள் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளோம். ஆராய்ச்சிக்கு தேவையான ஏராளமான கோப்புகள் நம்மிடம் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விழாவில் காவலூர் வான் வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ் ஞானிகள், ஆராய்ச்சியாளர் கள் தற்போது பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெங்க் ளூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வான் வெளி ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×