search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளசாராயம் விற்ற 4 பேர் கைது
    X

    ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்தவர் கைது.

    கள்ளசாராயம் விற்ற 4 பேர் கைது

    • விரட்டி சென்ற மடக்கி பிடித்தனர்
    • 10 லிட்டர் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாமலேரிமுத்தூர் கிராமத்தில் சோதனை செய்தபோது முட்புதர் அடர்ந்த மறைவான பகுதியில் கள்ளத்தனமாக கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.

    பின்னர் போலீசார் இருவரையும் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே அழித்தனர்.

    மேலும் இதே போன்று ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 5 லிட்டர் கள்ள சாராயம் வீதம் 10 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×