search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே  டீக்கடையில் 30 கிலோ புகையிலை பறிமுதல்
    X

    கயத்தாறு அருகே டீக்கடையில் 30 கிலோ புகையிலை பறிமுதல்

    • கயத்தாறு அருகே டீக்கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • போலீசாருக்கு புகார் சென்றுள்ளதால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் நாற்கரச் சாலையில் நடத்தி வரும் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

    அதன் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்–பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த 30 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×