search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க மாநாடு
    X

    மாநாட்டில் கலந்துெகாண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க மாநாடு

    • அனைவரும் பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார்.
    • மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் 2 வது வட்டார மாநாடு மற்றும் பேரணி ஊரணிபுரத்தில் நடைபெற்றது.

    வட்டார விவசாய நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். மேலும் சங்க செயலாளர் வி.கே.சின்னத்துரை வரவேற்று ஸ்தாபனம் வேலை அறிக்கையினை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் வ.பெ.தங்கராசு, அன்பழகன், பெரியசாமி, சி.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் திருச்சி (பொ.ப.து) நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் முருகேசன், மாநாட்டு பேரணியை துவக்கி வைத்து பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர், ஜெஷ்டின், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், வழக்க றிஞர் அ.ராமகிரு ஷ்ணன், அகில இந்திய எல்.ஐ.சி.முகவர் சங்க பட்டுக்கோட்டை கிளை செயலாளர் பஞ்சாட்சரம், மற்றும் நிர்வாகி தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர். ஆர், கண்ணையன், டெல்டா இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்துராசு, மற்றும் அதன் நிர்வாகிகள் சரவணன், முத்து, முருகேசன்.

    தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் செங்குட்டுவன், திருவோணம் வட்டார வாடகை பாத்திர சங்கத்தின் தலைவர் செல்வம், சிபிஐ மாவட்ட க்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கருப்பையா, விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், தங்கராஜ், சாமி.மனோகரன், சீனிவா சன், கே.ஆர்.முருகே சன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

    மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவோணம் வட்டார அளவில் செயல்பட்டு வந்த இச்சங்கத்தினை தஞ்சை மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக வி.கே.சின்ன துரை நன்றி கூறினார்.

    Next Story
    ×