search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    • கோவில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து போலீசார், மர்மநபரை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஈஸ்வரி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக கீழமுன்னீர்பள்ளம் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த செல்லபாண்டியன்(வயது 70) என்பவர் இருந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்ற அவர் நேற்று காலை சென்று பார்த்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. உடனே செல்லபாண்டியன், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×