என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேட்டையில் வீடு-கடையில் கொள்ளை
- நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்்.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி. ஆர்். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெப பாண்டியன் (வயது 55).இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார்்.
நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மகன் முகமது ரியாஸ் (24). இவர் பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி எதிரே டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ரியாஸ் இன்று காலை கடைக்கு சென்றார்
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாகவும் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்