search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் வீடு-கடையில் கொள்ளை
    X

    பேட்டையில் வீடு-கடையில் கொள்ளை

    • நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி. ஆர்். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெப பாண்டியன் (வயது 55).இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார்்.

    நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மகன் முகமது ரியாஸ் (24). இவர் பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி எதிரே டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ரியாஸ் இன்று காலை கடைக்கு சென்றார்

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாகவும் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×