search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருடிய மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் தீ வைத்து எரித்த திருடன் கைது
    X

    திருடிய மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் தீ வைத்து எரித்த திருடன் கைது

    • சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் பெருமாள்கோவிலை சேர்ந்தவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மேட்டார் சைக்கிள் திடீரென மாயமானது.
    • அக்கம் பக்கத்தில் தேடிய போது அந்த மோட்டார் சைக்கிள் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டு கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் பெரு மாள்கோவிலை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 55) . இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மேட்டார் சைக்கிள் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது அந்த மோட்டார் சைக்கிள் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வெள்ளார் ஜே.ஜே. நகரில் வசித்து வரும் செல்வகுமார் (23) என்பவர் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வெள்ளாரில் திருடிய அந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் தீ வைத்து எரித்ததாக கூறினார். மேலும் இது போல பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் கூறினார். மேலும் எங்கெங்கு மோட்டார் சைக்கிளை திருடினார் என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×