search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பாலத்தின் தூண் இடிந்தது
    X

    கொள்ளிடம் ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தின் ஒரு பகுதி.

    வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பாலத்தின் தூண் இடிந்தது

    • குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது.
    • தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் குடிநீர் தேவைகள் முடங்கின.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் பகுதியில் வாண்டையார் இருப்பு கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 2006-ம் ஆண்டு சுமார் 450 கோடி மதிப்பில் இப்பாலம் கட்டப்பட்டது.

    நாகை மாவட்டம் கடற்கரை பகுதி என்பதால் அங்கு நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்காக அணைக்கரை அம்மையப்பன் பகுதி, வாண்டையார் இருப்பு பகுதிகளில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு 2 ராட்சத மோட்டார்கள் அமைத்து 24 மணி நேரமும் தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

    3 மணி நேரத்திற்கு ஒரு தடவை மோட்டார் நிறுத்தப்படும்.

    இதற்காக 3 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பன ந்தாள் அருகே உள்ள வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பாலத்தின் ஒரு தூண் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.

    கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் திறக்க ப்பட்ட உபரிநீர் வரத்தால் பாலம் உள்வாங்கியது.

    இப்பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் லேசாக சேதமடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.இதனால் நாகை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியா மல் குடிநீர் தேவைகள் முடங்கின.

    இதனால் சுமார் 587-க்கும் மே ற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டுசெல்ல முடியாததால் பொது மக்கள் பெரும்அவதிக்குஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகா ரிகள் குடிநீர்திட்டப்பணிகளை உடனடியாக ஆய்வு செய்து அதனைசீர மைத்து தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×