என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிழாவுக்காக தயாரிக்கப்படும் அக்னிசட்டிகள்.
களைகட்டும் கோவில் திருவிழாக்கள் பெரியகுளத்தில் அக்னிசட்டிகள் விற்பனை அமோகம்
- கொப்பரை, வளையம், வட்டசட்டி, சாதாரண தீச்சட்டி என 4 விதங்களில் அக்னிசட்டிகள் தயாரி க்கப்பட்டு ரூ.50 முதல் ரூ.140 வரை தரத்திற்கேற்ப விற்கப்படுகின்றன.
- தொட ர்ந்து அதிக அளவில் ஆர்ட ர்கள் வருவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் சின்னமனூர் உள்பட பல்வேறு பகுதி களில் கோவில் திருவிழாவு க்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
வேண்டுதல் நிறைவேறியவுடன் பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி க்கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதற்காக கோவில்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, புல்லக்காபட்டி, கைலாசபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட இடங்களில் அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொப்பரை, வளையம், வட்டசட்டி, சாதாரண தீச்சட்டி என 4 விதங்களில் அக்னிசட்டிகள் தயாரி க்கப்படுகின்றன. ரூ.50 முதல் ரூ.140 வரை தரத்தி ற்கேற்ப விற்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுழலும் சக்கரத்தில் வைக்கப்பட்ட குழைவு மண்ணை தொழி லாளர்கள் அக்னி சட்டி வடிவத்துக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் வெயிலில் காய வைத்து அடிப்பகுதியை மண் கொண்டு அடைக்கி ன்றனர்.
மேலும் சூளையில் வைத்து பதப்படுத்து கின்றனர். இறுதியாக சுத்தம் செய்து வர்ணம் பூசி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி உள்ளதால் அதிக அளவில் அக்னிசட்டிகள் தேவை ப்படும். எனவே இரவு பகலாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொட ர்ந்து அதிக அளவில் ஆர்ட ர்கள் வருவதால் மண்பா ண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்






