search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது

    • விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.
    • விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வருகிற 25-ந்தேதி( சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும்விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் குறைதீா் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்களும், ஆலோசனைகளும் தெரிவிக்கப்படும்.

    தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×