search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
    X

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    • இளம்பெண் 8 மாதம் கர்ப்பமானதால் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இதுகுறித்து அந்த 17 வயது இளம்பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அருந்தவபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் ரவி மகன் விவேக் (வயது24). இவர் தனது உறவினர் வீட்டு 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த இளம்பெண் 8 மாதம் கர்ப்பமானதால் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு அந்தப் பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதுகுறித்து அந்த 17 வயது இளம்பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பாபநாசம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அழகம்மாள், உதவி ஆய்வாளர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருந்தவபுரம் விவேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விவேக்கை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×