என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் 12-ந் தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
- தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நடைபெற உள்ளது.
வீ. கே. புதூர்:
தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2004 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள்,
2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் காலை, நண்பகல்,பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ள வார்டு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை செலுத்தாதவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்