என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணகுடியில் ஆசிரியர் பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை
- நீலாம்பரி திடீரென சமையல் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
- பரிசோதித்த டாக்டர்கள் நீலாம்பரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பணகுடி:
பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் தென்கரை முத்து. இவருக்கு மனைவி மற்றும் ஆறுமுகம் என்ற மகன், நீலாம்பரி(வயது 21) என்ற மகள் உள்ளனர்.
தற்கொலை
நீலாம்பரி வள்ளியூரில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென சமையல் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். அங்கிருந்த மண் எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நீலாம்பரியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று தென்கரைமுத்து தனது குடும்பத்தினருடன் ஆரல்வாய்மொழியில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அதன்பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பிய சிறிது நேரத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்