என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலியை குத்திக்கொன்று விட்டு வாலிபர் ரெயில் முன்பு படுத்து தற்கொலை
- கடந்த சில தினங்களாக கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
- இந்த நிலையில் இன்று காலை வினோத்குமார் புவனேஸ்வரியை சந்திப்பதற்காக வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருச்சி:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (31).
இதற்கிடையே புவனேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (30) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதனால் கணவர் வேலைக்கு சென்றிருக்கும் நேரங்களில் புவனேஸ்வரி தனது கள்ளக்காதலன் வினோத்குமாரை தனது வீட்டிற்கு வரவழைத்து இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வினோத்குமார் புவனேஸ்வரியை சந்திப்பதற்காக வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வினோத் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்தில் திடீரென்று சரமாரியாக குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எப்படியாவது போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த வினோத்குமார், தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதற்காக அவர் பொன்மலை ரெயில் நிலையம் அருகே வந்தார். பின்னர் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக்கொண்டார்.
அந்த சமயம் அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை துண்டாகி பலியானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பொன்மலை இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலியை குத்திக்கொலை செய்துவிட்டு வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்