என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்துக்கொலை
- தென்கலம் தலையாரி தேவேந்திரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி வருகிறார்.
- அந்த நபரின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு செல்லும் வழியில் குளம் ஒன்று உள்ளது.
இந்த குளத்தின் கரைக்கு கீழே ஒரு முட்புதரில் புகை வந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று எரிந்து கரிக்கட்டையாக கிடந்தது.
இதையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தென்கலம் தலையாரி தேவேந்திரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த நபரின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அவரை யாரேனும் கடத்தி கொண்டு வந்து காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்து பின்னர் உடலை எரித்தார்களா? அல்லது வேறு எங்கு வைத்தாவது கொலை செய்துவிட்டு பின்னர் இந்த பகுதிக்கு உடலை கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்தாார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்