search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோரிடம் கோபித்து கொண்டு சென்னை சென்ற சிறுமியை லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்
    X

    பெற்றோரிடம் கோபித்து கொண்டு சென்னை சென்ற சிறுமியை லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்

    • பெற்றோரிடம் கோபித்து கொண்டு திருப்பூர் சென்ற சிறுமி அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை சென்றுள்ளார்.
    • சென்னை சென்றதும் என்னசெய்வதென்று தெரியாமல் சிறுமி தவித்துள்ளார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    இதையடுத்து சிறுமியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சிறுமி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமி காங்கயத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். இதனிடையே சிறுமிக்கு திடீரென வாந்தி , மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது. உடனே பெற்றோர் சிறுமியை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.

    அப்போது பெற்றோரிடம் கோபித்து கொண்டு திருப்பூர் சென்ற சிறுமி அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை சென்றுள்ளார். அங்கு சென்றதும் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். அந்த நேரம் சென்னையை சேர்ந்த செல்போன் சிம்கார்டு விற்பனை செய்யும் விஷ்ணு(வயது 21) என்பவர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் கோபித்து கொண்டு தனியாக வந்திருப்பதாக கூறியுள்ளார்.

    அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட விஷ்ணு சிறுமியை அங்குள்ள லாட்ஜ்க்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார். மேலும் உனக்கு உதவிகள் செய்கிறேன். பயப்பட வேண்டாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி பகல் நேரங்களில் வெளியிடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    மேலும் 4 நாட்களாக சிறுமியை லாட்ஜில் அடைத்து வைத்து விஷ்ணு உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பிறகு சிறுமியை சென்னையில் இருந்து திருப்பூருக்கு ரெயிலில் ஏற்றி வைத்துள்ளார். விஷ்ணு லாட்ஜில் அடைத்து வைத்து உல்லாசம் அனுபவித்ததன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி விஷ்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியை லாட்ஜில் அடைத்து வைத்து வாலிபர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×