என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் மது போதையில் தகராறு செய்த தொழிலாளி குத்திக்கொலை
- பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
- பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். ஒரு குழந்தை மட்டும் உள்ளது. குழந்தை, பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (39) என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை முத்துராஜிடம், பாலமுருகன் தான் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில தினங்களில் கொடுத்து விடுவதாக முத்துராஜ் கூறியுள்ளார்.
இருப்பினும் பாலமுருகன், பணத்தினை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் சென்று பணத்தினை விரைவில் தருவதாகவும், பாலமுருகன் அவதூறாக பேசுவதாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரேவதி, பாலமுருகனை சத்தம் போட்டுள்ளார். மது போதையில் இருந்த பாலமுருகன் ரேவதிவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ரேவதி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு அதிக மது போதையில் இருந்த பாலமுருகன், எப்படி நீ பணம் கேட்டதை சித்தியிடம் கூறினாய் என்று கூறி முத்துராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு ஓடிவிட்டார்.
இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்