என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உணவுப்பொருள் மீதான ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு- விக்கிரமராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை தொடர்ந்து விதித்து வருகிறது.
- இதற்கு பொது மக்களும், வணிகர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு -தமிழக அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில நிர்வாகிகளோடு கலந்தாலோசித்த கூட்டத்தில் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், இதர மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் மீதான வரி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் வரி விதிப்பை கைவிட கோரியும், மாநில வேளாண் விளை பொருட்களுக்கான செஸ்வரி விதிப்பினை மறுபரிசீலனை செய்து திரும்பபெறக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளி) காலை 10.05 மணிக்கு நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய வணிகர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது.
திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வினை நீர்த்துபோகச் செய்கின்ற செயலை ஒருசிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொறுத்தவரை மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வினை வெளிப்படுத்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு, பேரமைப்பைச் சார்ந்த வணிகர்கள் எந்தவித ஒற்றுமைச் சிதறலுக்கும் இடமளிக்காமல், கட்டுக்கோப்போடு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும், நமது நோக்கத்தினை நிறைவேற்றிடவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்