search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
    X

    அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

    • குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இன்று அர்ஜூன் சம்பத் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
    • இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். கோபி, பாபு, ஜோஸ்பின், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இன்று அர்ஜூன் சம்பத் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். கோபி, பாபு, ஜோஸ்பின், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவேந்தன் உள்பட 10 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×