என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்பேட்டையில் தீயில் கருகிய நிலையில் 3-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி
- வெப்பம் தாங்க முடியாமல் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் பணி புரிந்து வந்தவர் ஜெயந்தி (வயது35). இவர் 3-வது மாடியில் உள்ள சமையல் அறையில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் போது சுடிதாரில் தீப்பிடித்தது.
இதையடுத்து வெப்பம் தாங்க முடியாமல் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story