search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அசாம் மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தங்க வைப்பதா?- பா.ஜனதாவுக்கு சீமான் கண்டனம்
    X

    அசாம் மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தங்க வைப்பதா?- பா.ஜனதாவுக்கு சீமான் கண்டனம்

    • மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்க வைத்து ஆட்சிக்கலைப்புக்கான முன்னெடுப்புகளைச் செய்து வரும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும்.
    • மாநிலக்கட்சிகளைப் பிளவுப்படுத்தி, பலவீனப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வின் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டு உள்ள பெரும்வெள்ளம் காரணமாக, 45 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, 80-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, அம்மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கிறது.

    இந்த சூழலில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்க வைத்து ஆட்சிக்கலைப்புக்கான முன்னெடுப்புகளைச் செய்து வரும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம்பேசி தன் பக்கம் ஈர்ப்பதும், மாநில அமைச்சரவையைச் சீர்குலைத்து, தனது அதிகார வலிமையைக் கொண்டு கலைப்பதும், மாநிலக்கட்சிகளைப் பிளவுப்படுத்தி, பலவீனப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வின் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×