என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புளியங்குடி அருகே பா.ஜனதா கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய 4 பேர் மீது வழக்கு
BySuresh K Jangir16 Aug 2022 4:42 AM GMT
- பா.ஜனதா கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
- தகவல் அறிந்த டி.என்.புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் அழகுதுரை புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என். புதுக்குடியில் நகர பா.ஜனதா சார்பில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அங்கிருந்த பா.ஜனதா கொடிக்கம்பத்தில் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினர். பின்னர் அந்த கொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் அறிந்த டி.என்.புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் அழகுதுரை புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நகர செயலாளர் உள்பட பா.ஜனதாவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X