என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
- ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்ற சதீஷ் அந்த வழியாக சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- இதனை பார்த்தவர்கள் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர் பள்ளம் அருகே உள்ள மருதம்நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவரது 2-வது மகன் சதீஷ் (வயது16). இவன் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்ற சதீஷ் அந்த வழியாக சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சதீஷ் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனது பெற்றோர் சதீஷூக்கு செல்போன் கொடுக்காமல் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்