என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்தது
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரத்து 72 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்றுமுன்தினம் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்துடன் அமர்ந்து பரிசலில் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் சவாரி சென்று வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரத்து 72 கன அடியாக சரிந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடித்ததால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மீண்டும் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என 15 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் 120 அடிக்கு கீழ் சரிய தொடங்கி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து 70 நாட்களாக 120 அடிக்கு மேல் இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 120 அடிக்கும் கீழாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அணையின் வரலாற்றில் 1959-ம் ஆண்டு அதிகபட்சமாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 78 நாட்கள் 120 அடிக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்