search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் தற்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலையும் 21 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதில் 21 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×