search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக சரிவு

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 408 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 153 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    • அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கலுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் அதே அளவில் வந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    விடுமுறை நாளான நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்திருந்தனர். அவர்களின் பெரும்பாலானோர் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி மற்றும் காவிரி கரைகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலத்தில் இருந்து ஒகேனக்கல் அருவிகளின் அழகையும், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன் காட்சியகம் ஆகியவற்கையும் குடும்பத்தினருடன் கண்டு கழித்தனர். மேலும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பையொட்டி மீன் விற்பனை களை கட்டியது. 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையிலும் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செல்ல முடியாமல் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 408 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 153 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 102.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 102.29 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×